News March 20, 2025
சென்னை காவல்துறையில் மாற்றம்

தமிழ்நாடு அரசு மூன்று உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக லக்ஷ்மி, காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 21, 2025
பிரபல ரவுடி சுட்டிபிடிக்கப்பட்டார்

சென்னையில் பிரபல ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் மகாராஜா என்ற ரவுடி மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்யும்போது, அவர் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அவரை சுட்டுப்பிடித்தனர்.
News March 21, 2025
சென்னையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வரும் 26.03.2025- 28.03.2025 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, தொழில் முனைவோர் மேம்பாடு & புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, 8668108141 /8668102600 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
News March 20, 2025
ராயப்பேட்டை ஹாஸ்பிடலில் வெப்ப வாதம் தனி வார்டு தயார்

தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், வெப்பவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வெப்பவாத சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.