News March 19, 2024
சென்னை: கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை

காசிமேடு பகுதியில் கலா என்ற 65 மூதாட்டி மகன் சீனிவாசன் உடன் வசித்து வந்தார். அடிக்கடி கலாவுக்கு வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதால், நேற்று கலாவை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில், அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 19, 2026
அபாயத்தில் சென்னை; ஆய்வில் அதிர்ச்சி!

சென்னை ஐஐடி சார்பில் ஒலி மாசு குறித்து கடந்த 8மாதங்களாக சென்னையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சென்னையில் உள்ள 15மண்டலங்களில் நடத்திய ஆய்வில் வளசரவாக்கம், அம்பத்தூர் மண்டலங்களில் அபாயகரத்தில் ஒலி மாசு அதிகம் இருப்பதும், அடையாறு, மணலி மண்டலங்களில் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கட்டுமான பணி, போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒலி மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
சென்னையில் பட்டப்பகலில் சரமாரி அரிவாள் வெட்டு!

திருவொற்றியூர் தனியார் நிறுவன ஊழியரான வினோத்குமாரை, நண்பர் ஜெய்ஷயாம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் வினோத்குமாரின் வயிறு, தொடைப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தாக்குதல் நடத்திய ஜெய்ஷயாம் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடிய வினோத்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
News February 18, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


