News April 26, 2025
சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகள் 28 பேர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது ஆழியாறு ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, 4ஆம் ஆண்டு படிக்கும் ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), ரேவந்த் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் தருண் விஸ்வரங்கன் (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Similar News
News December 27, 2025
சென்னை:போதையில் காதல் மனைவி அடித்துக்கொலை

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த மெக்கானிக் பிரவீன்குமார், மதுபோதையில் தனது மனைவி வித்யாபாரதியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் அடித்து உதைத்துள்ளார். இதில் கட்டிலில் விழுந்து பலத்த காயமடைந்த வித்யாபாரதி, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து பிரவீன்குமாரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 27, 2025
சென்னை: இன்று SIR சிறப்பு முகாம் நடைபெறுகிறது!

சென்னையில் S.I.R பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 27, 2025
சென்னை: FACE BOOKல் ஆசை வார்த்தை கூறி ரூ.27,000 விபூதி!

சென்னையில் முகநூலில் பெண்ணுடன் பழக வைப்பதாக கூறி அமீத் அலி என்பவரிடம் வடமாநில இளைஞர் கூகுள்பே மூலமாக ரூ.27000 பெற்று ஏமாற்றி உள்ளார். அவரை தொடர்பு கொண்டபோது அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமீத் அலி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலிசார் திருடனை தேடி வருகின்றனர்.


