News April 26, 2025
சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகள் 28 பேர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது ஆழியாறு ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, 4ஆம் ஆண்டு படிக்கும் ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), ரேவந்த் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் தருண் விஸ்வரங்கன் (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Similar News
News December 25, 2025
சென்னை: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்

சென்னை மந்தைவெளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அருகே மரத்தில் அடையாளம் தெரியாத 30 வயது வாலிபர் தூக்கில் பிணமாக தொங்குவதாக அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று அங்கு சென்ற போலீசார் மரத்தில் சடலமாக தொங்கியவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரனுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக்குக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டது. பொருளாதாரம், புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயாவுக்கு பதவி வழங்ப்பட்டது.
News December 25, 2025
சென்னை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? தீர்வு இதோ!

சென்னை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க


