News February 9, 2026
சென்னை: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News February 11, 2026
சென்னையில் போலி மருத்துவர்கள்- உஷார்!

சென்னை அண்ணா நகர் முடி மாற்று சிகிச்சை மையத்தில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உரிய கல்வித் தகுதியின்றி சிகிச்சை அளித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த ஜக்வீர் சிங், ஹர்திவப் சிங், வேலூரை சேர்ந்த ஜாஃபர் சாதிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News February 11, 2026
சென்னை: விபத்தில் காதலன் பலி; தூக்கில் தொங்கிய காதலி!

சென்னை அயனாவரம் சோலையம்மன் தெருவைச் சேர்ந்த சுப்பு சவு மியா(20). இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது சுப்பு சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(22) என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும் அவர் ரயில் விபத்தில் உயிரிழந்ததால் துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.
News February 11, 2026
திருவொற்றியூர்: ரயிலில் அடிபட்ட வாலிபருக்கு தீவிர சிகிச்சை

திருவொற்றியூரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). நேற்று முன்தினம் (பிப். 9) இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்லும் போது, திருவொற்றியூர் அண்ணாமலை நகரில், மூடிய ரயில்வே கேட்டின், தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மின்சார ரயிலில் அடிபட்டு மணிகண்டன் கை சிதைந்தது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


