News September 5, 2025
சென்னை: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News September 5, 2025
சென்னை கலெக்டர் அறிவிப்பு

ஆதி திராவிடர்களின் நலனுக்காக தொண்டாற்றி வரும் ஒருவருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி வருகிறது. அவ்வகையில் 2026-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விருதுக்கான விண்ணப்ப படிவத்தை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பெற்று வரும் 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
சென்னை: பெண்களுக்கு முக்கிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ▶️அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம்-044-23452726. ▶️எழும்பூர்-044-28455168. ▶️கிண்டி-044-24700011. ▶️புளியந்தோப்பு -044-23452523. ▶️தி,நகர்-044-23452614. இந்த எண்களை அனைத்து பெண்களுக்கும் ஷேர் செய்து, பதிவு செய்ய சொல்லுங்கள்.
News September 5, 2025
சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை

தீபாவளியை முன்னிட்டு 11 சிறப்பு ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தீபாவளிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. முக்கிய ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. எந்தெந்த ரயில்களுக்கு தேவை அதிகமாக உள்ளது என ஆய்வு செய்து சிறப்பு ரயில்இயக்கப்படும் என்றனர்.