News August 12, 2025
சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்த பெண்

சென்னை ஐகோர்ட்டில் இன்று ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையில் சிறுமியை காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் அதிருப்தி அடைந்த சிறுமி ஐகோர்ட் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆக.12) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
News August 12, 2025
சென்னையில் தொடர் போராட்டம் ஏன்?

சென்னை மாநகராட்சியின் 15மண்டலங்களில் 11மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக 2,000-த்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.22,000 ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆக.1ம் தேதி முதல் சில மண்டலங்களில் தூய்மை பணி தனியார் வசம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (<<17381810>>தொடர்ச்சி<<>>)
News August 12, 2025
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் (2/2)

அப்படி தனியார் வசம் ஒப்படைப்பதால் ரூ.16,000 மட்டும் ஊதியம் வழங்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை எதிர்த்தும், பணி நிரந்தம் செய்ய கோரியும் தூய்மைப் பணியாளர்கள் இன்று 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயல், கோவிட் காலத்தில் எங்களை தெய்வமாக பார்த்தவர்கள், தற்போது தூக்கி போட்டார்கள் என கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.