News February 5, 2026
சென்னை: உயிருக்கு எமனாய் வந்த லோன் ஆப்!

நெசப்பாக்கம் கானு நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் (19). மொபைல் போன் செயலி மூலம் வந்த விளம்பரத்தில், 35,000 ரூபாய் செலுத்தினால் 85,000 ரூபாய் ‘லோன்’ உடனே வழங்கப் படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி செலுத்திய பிறகு 85,000 ரூபாய் பணம் வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்தவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 7, 2026
சென்னை: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 7, 2026
சென்னை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

சென்னை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 7, 2026
சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சென்னையில், மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற 09.02.2026 அன்று நடைபெற உள்ளது. காலை 9.30 மணியளவில் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அசல் சான்றிதழ் உடன் பங்கேற்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க


