News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் mhc.tn.gov.in/recruitment எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…

Similar News

News July 11, 2025

மயிலாடுதுறை கலெக்டர் எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் 130 இடங்களில் நடைபெற உள்ள “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்களில் மட்டுமே இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான படிவங்கள் வழங்கப்படும். தனியார் கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் போலியாக விற்கப்படும் விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News July 11, 2025

நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப்பணியிடங்கள் – ஆட்சியர்

image

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதில் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெற்று பூர்த்தி செய்து செயற்செயலாளா், மாவட்ட சுகாதார அலுவலகம், 7-வது தளம், ஆட்சியா் அலுவலக வளாகம், மயிலாடுதுறை 609001 என்ற முகவரிக்கு விரைவுத் தபால் (அ) பதிவுத்தபால் மூலம் ஜூலை 21க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

மகளிா் உரிமைத் தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு: ஆட்சியா்

image

மயிலாடுதுறையில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் பயனடைய ஜூலை 15 முதல் அக்.15 வரை நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். 2ஆம் கட்டமாக 130 இடங்களில் நடைபெறவுள்ள முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தனியாா் கடைகள், வணிக நிறுவனங்களில் போலியாக விற்கப்படும் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

error: Content is protected !!