News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<> mhc.tn.gov.in/recruitment<<>> எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்.

Similar News

News November 14, 2025

பெரம்பலூர்: போலி மருத்துவர் கைது!

image

பென்னக்கோணத்தை சேர்ந்த கதிர்வேல் (33) என்பவர் தனது வீட்டின் அருகே, மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்பதாக சுகாதாரத்துறை இணை இயக்கு மாரிமுத்துக்கு வந்த தகவலின் படி அவர் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது கதிர்வேல் மெடிக்கல் நடத்தி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மங்களமேடு போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 14, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 40 வயதிற்குட்பட்ட, அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 14, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!