News October 25, 2025
சென்னை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News October 25, 2025
சென்னையில் இந்த Certificate பெறுவது எப்படி?

1)தமிழக அரசின் <
2)அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.
3)அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4)பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
5)10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
News October 25, 2025
சென்னை: களப்பணியில் 22,000 பணியாளர்கள்!

சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய 22,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 22,000 பேர் களத்தில் உள்ளனர். பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள், 500 டிராக்டர்கள், 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News October 25, 2025
அடையாறு ஆற்றில் சீரமைப்புப் பணி!

அடையாறு ஆற்றின் முக துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பு நீர்வளத்துறையினரால் செப்டம்பர் 2025 முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து 24.10.2025 அன்று மாலையில் இருந்து படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கையினை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 ஜேசிபி இயந்திரங்களுடன் பணிகள் நடைபெற்றன.


