News October 16, 2025

சென்னை: இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

சென்னையில் இன்று (அக்.15) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை “Knights on Night Rounds” எனும் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர காவல் துறை சார்பில் ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. மைலாப்பூர், அடையார், கில்பாக், டி.நகர், கொயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசரநிலையில் “100” எண்ணை தொடர்புகொள்ளலாம்.

Similar News

News October 16, 2025

ரூ.35,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (OSC) பெண்களுக்கான பல்வேறு ஒப்பந்தப் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மைய நிர்வாகி, ஆலோசகர், வழக்கு பணியாளர் முதல் பாதுகாவலர் வரை பல பதவிகள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மாத ஊதியம் ரூ.35,000 ஆகும். இதற்கு https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.

News October 15, 2025

பல தவறான தகவல்களை தரும் CM: நயினார் நாகேந்திரன்

image

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், கரூரில் நடந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் ஒரு விளக்கம் கொடுத்தார். அதில் பல தவறுகள் இருந்தன. தவெக தலைவர் விஜய் பத்து ரூபாய் பாட்டில் என்ற பாடும் போது, செருப்பை தூக்கி வீசுகிறார்கள். கரண்ட் போகிறது. லத்தி சார்ஜ் நடக்கிறது. இதை முதலமைச்சர் மறுக்கிறார் என்றார்.

News October 15, 2025

35 பேர் தப்பி ஓட்டம்

image

மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மையத்தில் இருந்த 35 பேர் திடீரென ஒன்று கூடி காவலாளியை தாக்கி விட்டு போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி சென்றனர்.

error: Content is protected !!