News January 20, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (19.01.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
சென்னை: உள்ளாடையுடன் தூக்கில் தொங்கிய பெண் காவலர்!

சென்னை எழும்பூரில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இசசம்பவம் தொடர்பாக பெண் காவலரை அவரது கணவரே அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக தாய் கண்ணீர் மல்க எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், வெறும் உள்ளாடையுடன் யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா என காவலரின் தாய் கேள்வி எழுப்பி உள்ளார்.
News February 13, 2026
சென்னை: 10 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த நபர் கைது!

2013ம் ஆண்டு பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ், பிணையில் வெளியேறிய பின்னர் 2016 முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் 2025 ஏப்ரல் 9 அன்று நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. சுமார் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சதீஷை, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, வேளச்சேரி நேரு நகர் பகுதியில் நேற்று கைது செய்தனர்.
News February 13, 2026
கோயம்பேட்டில் பேருந்தை கொளுத்திய ஆசாமி!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பிளாட்பாரத்தில் நின்ற பேருந்தில் தீ வைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். உடனடியாக தீ அணைக்கப்பட்ட நிலையில், அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒருவர் பேப்பரில் தீ பற்ற வைத்து பேருந்துக்குள் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


