News April 25, 2025
சென்னை: ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி

சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரவி கல்லூரி மாணவர்கள் கோவை ஆழியார் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய 3 பேர் ஆழியார் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. *முன் பின் தெரியாத இடத்தில் உள்ள நீர்நிலைகளில் குளிக்கும் போது கவனம் முக்கியம் என நண்பர்களுக்கு அறிவுறுத்துங்கள்*
Similar News
News April 25, 2025
வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

சென்னை ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜ் (40) கைது செய்யப்பட்டார். மதுபோதையில், வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மூதாட்டிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 25, 2025
சென்னை அரசு நிறுவன எண்களை தெரிஞ்சிக்கோங்க

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. *நண்பர்களுக்கு பகிரவும்*
News April 25, 2025
பாலியல் வன்கொமை; மாணவி உயிரிழப்பு

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்ததாக உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமார் (45) சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கருக்கலைப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குச் சென்ற கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.