News February 7, 2026
சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சென்னையில், மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற 09.02.2026 அன்று நடைபெற உள்ளது. காலை 9.30 மணியளவில் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அசல் சான்றிதழ் உடன் பங்கேற்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
Similar News
News February 12, 2026
சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னையில், 19 மண்டல உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும், (பிப்.14) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடக்க உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பிழை திருத்தம், மொபைல் போன் எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படும். மேலும், ரேஷன் கடைகள் செயல்பாடு, விற்கப்படும் பொருட்கள் சேவைகளின் குறைபாடு குறித்தும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News February 12, 2026
போலீசார் பணிகளை தவிர்க்க கூடாது; உயர்நீதிமன்றம் கருத்து!

போலீசார் பணிகளை தவிர்க்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிப் -12 தெரிவித்துள்ளது. சென்னையில் பைக் ரேஸ் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘போலீசார் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை தவிர்க்க கூடாது. 2022ல் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது’ என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
News February 12, 2026
சென்னை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

சென்னை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


