News February 23, 2026
சென்னை அருகே கோர விபத்து; தூக்கி வீசப்பட்ட நபர்!

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (23). இவர் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் காரில் சென்ற போது ‘பிரேக்’-ஐ மிதிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார் எதிரே சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சஞ்சய்யை மடக்கி பிடித்த மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 23, 2026
சென்னையில் கொடூர கொலை; விசாரணையில் பகீர்!

புரசைவாக்கத்தில் தனியாக வசித்து வந்த பாலகிருஷ்ணன்(61) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு, வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவருடன் வேலை செய்யும் சக ஊழியரான பீகாரைச் சேர்ந்த ஷியாம் மாத்தோவ் (35) என்பவர் நகைக்காக கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 23, 2026
சென்னையில் திகில் சம்பவம்!

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ருதி(35). இவரது கடைக்கு முககவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து, பைக்கில் வந்த மர்ம நபர், ஸ்ருதி என்பவருக்கு பார்சல் வந்திருப்பதாகக்கூறி காவலாளியிடம் கொடுத்து சென்றார். அதை பிரித்து பார்த்த போது மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு இருந்துள்ளது. புகாரின் பேரில் பழிவாங்க நினைத்து மண்டை ஓடு அனுப்பிய தினேஷ், ஜோசப், சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.
News February 23, 2026
நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.


