News March 30, 2024
சென்னையில் 20 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணி

சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று உத்தரவிட்டு உள்ளார் சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
Similar News
News February 17, 2026
சென்னை: குளியளறையில் ஆடைகளின்றி பெண் சடலம்!

சென்னை: தி.மலையைச் சேர்ந்தவர் ரோஜா (35) வழக்கறிஞரான இவர், நேற்று(பிப்.16) முன்தினம் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நண்பர் யஷ்வந்த் குமாருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். பின் இருவரும் மது அருந்தியுள்ளனர். அன்றைய தினம், ஹோட்டலில் இருந்து வெளியே சென்ற யஷ்வந்த் குமார் திரும்பி வந்து பார்த்த போது, குளிக்கும் தொட்டியில் ஆடைகளின்றி மர்மமான முறையில் ரோஜா இறந்து கிடந்தார்.
News February 17, 2026
சென்னை: வெள்ளத் தடுப்பிற்கு 62% நிதி!

சென்னை மாநகராட்சி 2025–26 ஆண்டிற்கான முதல் காலநிலை பட்ஜெட்டாக ரூ.1,341.2 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் 62%க்கும் மேற்பட்ட நிதி வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் மேலாண்மை பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், 240 கி.மீ. மழைநீர் வடிகால் அமைத்தல், நீர்நிலைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் இன்றைய(பிப்.17) பட்ஜெட் தாக்குதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 17, 2026
சென்னையில் 9 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

சென்னையில் 9 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் அருண் நேற்றிரவு(பிப்.16) உத்தரவிட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜா, தரமணி சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், நீலகண்டன், மெரினா சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். யமுனா, கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். பார்த்தசாரதி அடையாறுக்கு, அன்புமணி முத்தயால்பேட்டைக்கு மாற்றப்பட்டனர்.


