News March 6, 2026
சென்னையில் 2 சிறுவர்கள் துடிதுடித்து பலி

அயனாவரம் பகுதியைச் சேர்ந்தோர் சஞ்சய்(12). அவரது நண்பர் பிரவீன்(12). இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ரயில்வேக்கு சொந்தமான ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரியின் ஆழத்தில் சென்றதால் சேற்றுக்குள் சிக்கி துடிதுடித்து உயிரிழந்தனர். போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்க அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, போலீசார் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
சென்னை: டிகிரி இருக்கா…மாதம் ரூ.50,000!

சென்னை மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News March 10, 2026
சென்னையில் கூண்டோடு கட்சி தாவல்!

சென்னை, OPS ஆதரவாளரான கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி கடந்த வாரம் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று கொளத்தூர், வில்லிவாக்கம், ராயபுரம், திரு.வி.க.நகர், ஆர்.கே.நகர், பெரம்பூர் பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர், இவரது தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து, கட்சியில் இணைந்தனர்.
News March 10, 2026
சென்னை: கிணற்றில் குதித்த தந்தை- தூக்கில் மகள்!

சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் பகுதியில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணகுமார் (57), இளைய மகள் பாக்கியா (30) திருமணம் ஆகாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 07.03.26 வீட்டை விட்டு சென்ற அவர், நேற்று கிணற்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தந்தை இறந்த துக்கம் தாங்க முடியாமல் பாக்கியாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


