News October 30, 2025
சென்னையில் ரூ.5,000 அபராதம்!

சென்னை மாநகராட்சியில் நாய்கள் & பூனை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், உரிமம் பெறாமல் இருப்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், நாய்கள் வெளியில் செல்லும் போது கழுத்து பட்டை இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது நவம்பர் 24 தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
Similar News
News October 30, 2025
கார்த்திகாவை நேரில் பாராட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் மகளிர் பிரிவில், கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா தங்கம் வென்றிருந்தார். அவரையும், அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், பாராட்டும் வகையில் இயக்குநர் பைசன் படக்குழு சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக மொத்தம் 10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் மாரிசெல்வராஜ் இன்று கார்த்திகாவிடம் வழங்கினார்.
News October 30, 2025
சென்னை: ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளில் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் துணை மேயர் மகேஷ் குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News October 30, 2025
சென்னை: வீட்டில் தீ விபத்து!

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மருத்துவர் ஆனந்த் பிரதீப் வசித்து வருகிறார். அதிகாலை 4 மணியளவில் இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவர் ஆனந்த் பிரதீப்பின் மனைவி ஷாஜி பாலா (58) பரிதாபமாக உயிரிழந்தார். மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா அல்லது சிலிண்டர் கசிவால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் கிண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


