News January 11, 2026
சென்னையில் ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னையில் மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூ.15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Similar News
News January 28, 2026
சென்னையில் 1 மாத குழந்தை ரூ.3 லட்சம்- அதிர்ச்சி!

சென்னையில் ஒரு மாத குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் உட்பட 8 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காசிமேட்டில் ஒரு மாத ஆண் குழந்தையை 3.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர்கள் திலகாவதி-
சகாயராஜ் தம்பதியினர் முயற்சி செய்துள்ளனர். மேலும், ஏற்கனவே 3 குழந்தை உள்ளதால் விற்பனை செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
News January 28, 2026
சென்னை: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

சென்னை மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )
News January 28, 2026
சென்னையில் மாதம் ரூ.7,000! APPLY NOW

சென்னை மக்களே உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.7000 சம்பாதிக்க ஓர் அரிய வாய்ப்பு. ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையின் மூலம் கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


