News October 10, 2025
சென்னையில் மெட்ரோ வாட்டர் குறை தீர்க்கும் கூட்டம்

சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, நகரம் முழுவதும் உள்ள அதன் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் குறை தீர்க்கும் கூட்டங்களை நடத்துகிறது. மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் இக்கூட்டங்கல் நடைபெறும். நீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல், புதிய இணைப்புகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து மக்கள் புகார்களை தெரிவிக்கலாம். உடனே தீர்வு காணப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 10, 2025
சென்னை: மின் கட்டணத்தை குறைக்க செம்ம ஐடியா!

சென்னையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News October 10, 2025
சென்னை: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

சென்னையில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.
News October 10, 2025
மின்சார ரயில் சேவை ரத்து

கடற்கரை – திருமால்பூருக்கு இன்று காலை 7.27-க்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று காலை 9.31, 9.51, 10.56, பகல் 11.40, நண்பகல் 12.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருமால்பூர் – கடற்கரைக்கு காலை 11.05-க்கு இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு – கடற்கரைக்கு பகல் 11.30, நண்பகல் 12, மதியம் 1.10, 1.45, உள்ளிட்ட நேரங்களில் ரத்து செய்யப்படுகிறது.