News December 20, 2025
சென்னையில் மிரட்டி மாமூல் வசூல்!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தம்பிதுரை (40). இவரது தம்பி தமிழழகன் (39). இவர்கள் இருவரும் ரவுடி நாகேந்திரனின் அக்கா மகன்கள் ஆவர். பிரபல குற்றவாளிகளான இவர்கள் இருவரும், நாகேந்திரனின் பெயரை சொல்லி மாமூல் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 29, 2026
சென்னை: முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம்

சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்ட நிலவரம் இன்று (ஜன.29) வெளியிடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3381 மில்லியன் கன அடி நீரும், புழல் ஏரியில் 3046 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. வீராணம் ஏரியில் 914 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 532 மில்லியன் கன அடி நீர் இருப்பதாக தெரிவித்துள்ளது.
News January 29, 2026
சென்னை: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

சென்னை மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News January 29, 2026
சென்னை: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

சென்னை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


