News January 26, 2026
சென்னையில் மின் தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் நாளை (ஜன.27) மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 – பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். அடையாறு: கெனால் பங்க் சாலை, புற்றுநோய் மருத்துவமனை, காந்தி நகர், கெனால் குறுக்குத் தெரு, விவேக் ஷோரூம், கிரசண்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன், மலர் மருத்துவமனை, மல்லிபூ நகர், கருணாநிதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
Similar News
News February 11, 2026
சென்னை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044–25342441 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*
News February 11, 2026
மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டியில் இன்று காலை புதிய தனியார் மருத்துவமனை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ள என்பதை குறித்து பார்வையிட்டார். மேலும் சிறப்பம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
News February 11, 2026
குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு: போலீசார் விசாரணை

சென்னை வியார்பாடியை சேர்ந்தவர் நந்தினி (34). இவர் குடும்பதகராறு காரணமாக நேற்று (பிப்.10) உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


