News October 23, 2025
சென்னையில் மாஞ்சா நூல், ட்ரோன் பயன்பாட்டுக்கு தடை

சென்னையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாஞ்சா நூல், ட்ரோன், பாராக்லைடர் மற்றும் மைக்ரோ லைட் விமானங்களின் பயன்பாடுக்கு டிசம்பர் 20 வரை தடை செய்யப்பட்டுள்ளது. கண்ணாடி பூசப்பட்ட மாஞ்சா நூல் மனிதர்கள் மற்றும் பறவைகளுக்கு ஆபத்தாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விதிமீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
இசையமைப்பாளர் சபேஷ் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்

இசையமைப்பாளரும், பல படங்களுக்கு பின்னணி இசை அமைத்தவருமான சபேஷ் சென்னை வடபழனியில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே கிட்னி பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இம்சை அரசன், 23ம் புலிகேசி, பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து சமுத்திரம் போன்ற படங்களின் இசை அமைத்துள்ளார்.
News October 23, 2025
சென்னை பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

சென்னை பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 23, 2025
சென்னை: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள்<