News March 19, 2024
சென்னையில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யபட்டுள்ளார். வெகுநேரமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவர் வெங்கடேசன், மனைவியை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Similar News
News September 25, 2025
தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்து

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
News September 25, 2025
சென்னை வந்தார் தெலுங்கானா முதல்வர்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சென்னை வந்தார். சென்னை வந்த ரேவந்த் ரெட்டியை விமான நிலையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News September 25, 2025
தேனாம்பேட்டையில் மாணவர்கள் மோதல்: 8 மீது வழக்கு

தேனாம்பேட்டை டிஎம்எஸ் பகுதியில் 2 கல்லூரி மாணவர்களும் மாறி மாறி கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் காயப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் ராயப்பேட்டை GH-ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் 8 நபர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.