News September 17, 2025

சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி

image

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில், இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் நிதி உதவியுடன், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில் தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வரும் அக்.1ஆம் தேதி முதல் தண்டையார்பேட்டையில் பார்வையற்ற பெண்களுக்கு 6 மாத கால இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு 90423 45660, 93445 48654 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 17, 2025

JUST IN: சென்னை- பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

image

உடல் நலக்குறைவால் இன்று (செப்.17) காலை நடிகர் ரோபோ சங்கர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் வேலை காரணமாக LOW B.P ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்அவருக்கு 2நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

News September 17, 2025

சென்னையில் மழை- மின் தடையா கவலை வேண்டாம்!

image

சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், மின்தடை ஏற்படும்போது, மின்னகம் (9498794987) எண்ணுக்கு கால் செய்து புகார் தெரிவிக்கலாம். அங்கு லைன் கிடைக்கவில்லை என்றால், சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 9444099255, மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 9445850739, சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 9498378194, சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 9150056672 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளிக்கலாம்.

News September 17, 2025

சென்னையில் பெரியாரின் கடைசி பேச்சு…

image

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாருக்கும், சென்னைக்கும் உணர்வுபூர்வமான ஒரு இணைப்பு உள்ளது. ஆம், தந்தை பெரியார் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், “சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றார்”. அதுவே அவரின் கடைசிப் பேச்சாக மைந்தது.

error: Content is protected !!