News March 20, 2025

சென்னையில் புதிய கொசுக்கள்?

image

மாநகராட்சி சார்பில் கொசு புகை மருந்து அடிக்கப்பட்ட பின்னரும் தற்போது கொசுக்கள் அழிவதில்லை. இதனால், புதிய வகை கொசு ஏதும் ஊடுருவி உள்ளதா? நாம் பயன்படுத்தும் மருந்து வீரியமிக்கதாக உள்ளதா? என்று சந்தேகம் ஏற்படுகிறது. புதிய வகை கொசுக்கள் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கேற்ப கொசு மருந்தை பயன்படுத்தி கொசு பரவலை கட்டுப்படுத்த முடியும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News March 20, 2025

கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்பனை

image

சென்னையில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான ரூ.1,700 மதிப்பிலான டிக்கெட் ரூ.8,000 வரையிலும், ரூ.3,500 டிக்கெட் ரூ.18,000க்கும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை 1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. இதனால், பலரும் டிக்கெட்டுகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.

News March 20, 2025

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

image

சென்னை அண்ணா சாலையில் சென்ற பேருந்தில், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ஆடையை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணி வியாபாரி சையது அப்துல் ரகுமான் என்பவரை, மாணவி காலணியால் அடித்து போலீசிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், சையது அப்துல் ரகுமான் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

News March 20, 2025

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது: EPS 

image

சென்னை தலைமைச் செயலகத்தில், எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்.20) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. ஆட்சியா இது? உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க மறுக்கிறர் முதலமைச்சர். எல்லா உயிரும் காக்கப்பட வேண்டும். அது தான் அரசாங்கம். சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறையை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்கிறது இந்த அரசு. இதை வேதனையாக உள்ளது” என்றார்.

error: Content is protected !!