News October 15, 2025

சென்னையில் பிரபல பிரியாணி கடைக்கு பறந்த உத்தரவு

image

கொடுங்கையூரில் உள்ள பிரபல ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட நாகராஜன் மற்றும் ராதிகா ஆகியோர் வாந்தி, உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரி சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதாக உறுதி செய்ததையடுத்து, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாகராஜனுக்கு ₹25,000, ராதிகாவுக்கு ₹50,000 என மொத்தம் ₹75,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

Similar News

News October 15, 2025

சென்னையில் மழை! ஸ்தம்பித்த வாகனங்கள்

image

சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மதுரவாயல், வானகரம் பூந்தமல்லி நெற்குன்றம், கிண்டி, பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால், பணிக்கு செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.

News October 15, 2025

சென்னை: தந்தைக்கு எமனாகிய மகன்

image

சென்னை குரோம்பேட்டையில் வசித்து வரும் சிவலிங்கத்தை(76), கடந்த 15 ஆண்டுகளாக மன நல சிகிச்சை பெற்று வரும் அவரது மகன் நிரோஷன்(40) நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கொரியர் வந்துள்ளதாக கூறி தாயை வெளியில் அனுப்பிவிட்டு, கத்தியால் தந்தை சிவலிங்கத்தை வயிற்றில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். சிட்லபாக்கம் போலீஸார் நிரோஷனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News October 15, 2025

சென்னை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!