News January 9, 2026

சென்னையில் பயங்கரம்; உடலை எரித்து வெறியாட்டம்

image

அரும்பாக்கம் விநாயகபுரத்தில் வசிப்பவர் சீனிவாசன் (50). இவர் 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, வீட்டில் அமுதாவை கத்தியால் குத்தி படுகொலை செய்து தீ வைத்து எரித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொடூரத்தை அரங்கேற்றியது டீ கடையில் வேலை பார்க்கும் சாந்தகுமார் (28) என்பது தெரியவந்தது.

Similar News

News February 3, 2026

தூய்மைப் பணியாளர் பத்மாவை பாராட்டிய ரஜினிகாந்த்

image

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை, அவரது குடும்பத்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டினார். சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கும் பத்மாவின் நேர்மையை கௌரவிக்கும் வகையில், ரஜினிகாந்த் அவருக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார்.

News February 3, 2026

சென்னை: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 3, 2026

சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க

image

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கப் புதிய WhatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களின் புகார்களை 8144930308 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் புகார்களை பதிவு செய்யலாம். குடிநீர் விநியோகம், கழிவுநீர் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்த புகார்களை இந்த எண்ணின் மூலம் எளிதாகத் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!