News December 9, 2025

சென்னையில் பணியில் இருந்த காவலர் கார் மோதி பலி

image

சென்னை மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் மேகநாதான், சீருடையில் அவ்வழியாக சென்றபோது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான காரை தேடி வருகின்றனர்.

Similar News

News April 3, 2026

சென்னை: பாலியல் தொழில் நடத்தியவர் கைது

image

சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன் தினம் காலை, பார்க் டவுன், வால்டாக்ஸ் ரோடு அருகிலுள்ள குழந்தை தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அதை நடத்திய தங்கும் விடுதியின் மேலாளர் பார்க் டவுன் குழந்தை தெருவை சேர்ந்த வீரமணி (37) என்பவரை கைது செய்தனர்.

News April 2, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (02.04.2026) இரவு 10 மணி முதல் நாளை (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 2, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (02.04.2026) இரவு 10 மணி முதல் நாளை (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!