News March 21, 2025
சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (மார்ச்.22) இயங்கும் என பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், திருத்திய கால அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 21, 2025
JUST IN: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாற்றம்

சென்னை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது அலுவலகம் அமைந்துள்ள 2130 சதுர மீட்டர் பரப்பளவில் நீதிமன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளதால், பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வருகை அதிகரித்து கூட்ட நெரிசல் ஏற்படும் சூழலில், அலுவலகம் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கிண்டியில் புதிய அலுவலகம் கட்டப்படவுள்ளது. சென்னை வாசிகளுக்கு SHARE பண்ணுங்க.
News September 21, 2025
சென்னை: புரட்டாசி அமாவாசைக்கு இவ்வளோ சிறப்பா!

சென்னை மக்களே! புரட்டாசியில் வரும் சனிக்கிழமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல இந்த மாதம் வரும் அமாவாசையும் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். இந்த நாளில் நீங்கள் அருகில் உள்ள நீர் நிலைகளில் திதி கொடுத்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News September 21, 2025
சென்னை மக்களுக்கு இனிப்பான செய்தி

சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனம் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தி, அதன் கொள்ளளவை 265 மில்லி லிட்டரிலிருந்து 530 மில்லி லிட்டராக உயர்த்தியுள்ளது. ₹66.78 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் அண்ணாநகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட மண்டலங்களும், மாங்காடு, குன்றத்தூர், திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளும் கூடுதல் குடிநீர் விநியோகம் பெற உள்ளன.