News May 10, 2024
சென்னையில் நகை கடையில் குவிந்த பொதுமக்கள்

சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினர்.
Similar News
News December 19, 2025
JUST IN: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.19) மாவட்ட தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையின்படி, தற்போது 25,79,576 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். SIR-க்கு பின்பு 35.58 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
JUST IN சென்னை: இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை!

இயக்குநர் லிங்குசாமியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் 2016 ஆம் ஆண்டு பெற்ற ரூ.35 லட்சம் கடனுக்காக வழங்கப்பட்ட செக் பவுன்ஸ் ஆனது. 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், இயக்குநர் லிங்குசாமி & நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், கடன் தொகையை 2 மாதத்திற்குள் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
News December 19, 2025
சென்னை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- DON’T MISS!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக சென்னை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


