News October 12, 2024

சென்னையில் தொடர் விடுமுறை 1,62,240 பேர் பயணம்

image

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். இதனால், சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் உடன் கூடுதலாக 1,028 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1,62,240 பயணிகள் பயணித்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News September 14, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 13, 2025

திரு.வி.க.நகரில் கஞ்சா பறிமுதல்: பெண் கைது

image

திரு.வி.க.நகர் காவல் குழு ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை பேருந்து நிலையம் அருகே சந்தேகமாக பையுடன் நின்ற 2 நபர்களை விசாரித்தபோது, 30 கிராம் OG கஞ்சா, 1.100 கிலோ கஞ்சா மற்றும் ₹90,000 பணம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பின் நஸ்ரின் என்ற பெண் கைது செய்யப்பட்டு, 17 வயது இளஞ்சிறார் மீது விசாரணை நடைபெறுகிறது. நஸ்ரின் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 13, 2025

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகை

image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நாளை நடைபெறவுள்ள ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்துள்ளார். அவரை சந்தித்து உரையாற்றினார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜாவும் உடன் இருந்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

error: Content is protected !!