News February 26, 2026

சென்னையில் துடிதுடித்து பலி

image

தண்டையார்பேட்டை, கார்டன் மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(56). பெயின்டரான இவர் ஜெயராஜ் என்பவரின் வீட்டில், பெயின்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். முதல் மாடியில் உள்ள பால்கனியில், நாற்காலியின் மீது ஏறி நின்று பெயின்ட் அடித்து கொண்டிருந்தபோது, கால் இடறி தரையில் விழுந்தவர், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 3, 2026

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: NGT உத்தரவை எதிர்த்து வழக்கு

image

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் புதிய கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாய (NGT) தடை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், 3 வாரங்களில் தமிழக அரசு மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பாய உத்தரவால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News March 3, 2026

சென்னையில் இப்படி ஒரு கோயிலா? கண்டிப்பா போங்க!

image

சென்னை அடையாறு அருகில் அமைந்துள்ளது மத்திய கைலாஷ் என்று அழைக்கப்படும் ஆனந்த விநாயகர் கோயில். இக்கோவிலில், “ஆத்யாந்த பிரபு” என்ற தனித்துவமான சிலை உள்ளது. இந்த சிலை வலதுபுறம் 50% விநாயகர் சிலையாகவும், 50% அனுமன் சிலையாகவும் உள்ளது. நவக்கிரக தோஷத்திலிருந்து விடுபட இங்கு பக்தர்கள் வழிபடுகிறார்கள். விநாயகர் மீது நேரடியாக கற்பூரம் ஏற்றி வைக்க இங்கு அனுமதிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 3, 2026

சென்னை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

error: Content is protected !!