News January 23, 2025
சென்னையில் தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி

சென்னையில் அடுத்த மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மணலி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே அரசு மினி பஸ்கள் இயங்கி வரும் நிலையில், கூடுதல் சேவைக்காக முதல் முறையாக தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Similar News
News November 5, 2025
சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

சென்னை மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <
News November 5, 2025
சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண்ணுக்கு, 10 வயதில் மகள் உள்ளார். இவர் மூர்த்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவரது இரண்டாவது கணவர், தனது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பெண் புகார் அளித்தார். அம்பத்தூர் மகளிர் போலீசார் மூர்த்தியிடம் விசாரித்ததில், சிறுமியிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
News November 5, 2025
சென்னை: சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்!

சென்னை வானகரம் பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் லக்ஷன். கடந்த 3ம் தேதி இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருநாய் ஒன்று சிறுவனை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் சிறுவனின் கை, கால் & முதுகில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுவன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


