News December 14, 2025

சென்னையில் குடுகுடுப்பைக்காரர் போல் வந்து திருட்டு

image

சென்னை கொட்டிவாக்கத்தில் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து வந்து, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செய்வினை இருப்பதாக கூறி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன், குழந்தைகள் இறந்துவிடுவார்கள் என்றும், பூஜை செய்வதாக கூறியும் பெண்ணின் 5 சவரன் நகை, ரூ.10,000 திருடியுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலி குடுகுடுப்பைக்காரர் பாலமுரளி என்பவர் கைது செய்யப்பட்டார்.

Similar News

News March 2, 2026

பயணிகளுக்கு தொல்லை: திருநங்கைகள் மீது வழக்கு பதிவு

image

சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கடந்த ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரையில்) 41திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.25,830 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் செயல்பட கூடாது என திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News March 2, 2026

சென்னை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

சென்னையில் ‘சைலண்ட்’ ஆக வேலை செய்யும் சீமான்

image

நாம் தமிழர் கட்சி இந்த முறை சென்னையில் உள்ள மீனவப் பகுதிகள் மற்றும் குடிசை மாற்று வாரியப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. “கடலோரத் தொகுதி”களில் தங்கள் வாக்குகளை அதிகரிக்க அவர்கள் எடுத்து வரும் மௌனப் புரட்சி, பெரிய கட்சிகளுக்குச் சவாலாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சீமானின் இந்த முயற்சி கைகொடுக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!