News December 14, 2025

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது!

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள், 27 ஆண்டுகளுக்குப் பிறகு 100 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன. இதன் காரணமாக, அடுத்த கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடைசியாக 1998-ஆம் இந்த மூன்று ஏரிகளும் முழுமையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 2, 2026

சென்னை: மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி!

image

கொத்தவால்சாவடியை சேர்ந்தவர் முத்துகுமார் (57). இவரது வீட்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோமின், சூரஜ், ரியாஸ்கான் உள்ளிட்டோர் பணி செய்து வந்தனர். நேற்று, கூரை அமைப்பதற்காக, இரும்பு சீட்டை எடுத்து வந்த போது மின்மாற்றியில் உரசியதில், மோமின் உட்பட மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், மோமின் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 1, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச். 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

சென்னை: உங்க ஆபீஸில் பிரச்னையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். உங்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!