News March 24, 2024
சென்னையில் கிருஸ்தவர்கள் குருத்தோலை பவனி

சென்னயில் கிருஸ்தவர்கள் இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும் பவனியாக சென்றனர்.
Similar News
News April 10, 2025
Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான டேட்டிங் ஆப் Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல், 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
News April 10, 2025
சென்னை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

▶️சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், 044-25228025 ▶️சென்னை மாநகராட்சி ஆணையாளர், 044-25381330 ▶️ சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர், 044-23452345 ▶️ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், 044-27662400 ▶️ மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர், 044-24714758 ▶️ லஞ்ச ஒழிப்புத் துறை, 044-22310989. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 10, 2025
18 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் உள்பட 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை இடையேயான ரயில் நிலைய பாதையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.