News March 25, 2025
சென்னையில் காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை மாநகர காவல் உளவுப்பிரிவு (1) துணை ஆணையராக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை காவல் ஆணையர் ஹரிகிரண் பிரசாத் மாற்றப்பட்டு, புதிய துணை ஆணையராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெகலீனா ஹைடன், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News March 26, 2025
சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இதனால் மார்ச்.29 அன்று காலை 10 மணி முதல் மார்ச்.30 அன்று காலை 10 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 26, 2025
சென்ட்ரல் ஆவடி நள்ளிரவு மின்சார ரயில் ரத்து

பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்ட்ரல் ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகர் மின்சார ரயில் மார்ச் 26,27,28 தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. ஆவடி ரயில் பணிமனையில் மார்ச் 26,27,28 தேதிகளில் நள்ளிரவு 12:30 மணி முதல் 3:30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அந்நாளில் சென்ட்ரலில் இருந்து 12:15க்கு ஆவடி செல்லும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
News March 26, 2025
இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <