News January 6, 2025
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னையில் கடந்த 10 நாட்களாக காற்றின் தர குறியீடு மிகவும் மோசம் அடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒட்டுமொத்த சென்னையின் காற்று மாசு தர குறியீடு 177 என்ற அளவுக்கும், மணலியில் அதிகபட்சமாக 213 தர குறியீடு அளவுக்கும், நீலாங்கரை 150, வேளச்சேரியில் 162, ஆலந்தூரில் மிதமான அளவை குறிக்கும் 112 தர குறியீடு அளவில் காற்று மாசு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 3, 2026
சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கப் புதிய WhatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களின் புகார்களை 8144930308 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் புகார்களை பதிவு செய்யலாம். குடிநீர் விநியோகம், கழிவுநீர் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்த புகார்களை இந்த எண்ணின் மூலம் எளிதாகத் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News February 3, 2026
JUST IN: சென்னை: பள்ளிக்கு கஞ்சாவுடன் வந்த மாணவன்

சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில், ஆசிரியர்கள் மாணவர்களை சோதனை செய்தனர். இதில், 11ஆம் வகுப்பு மாணவனிடம் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 5 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா புகாரின் பேரில், MKBநகர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News February 3, 2026
சென்னையில் தொடரும் கொடூரம்!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் 10ம் வகுப்பு மாணவிக்கு வாலிபர் ஒருவர் தவறான செய்கையின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், ஆயுதப்படை பெண் காவலராக பணிபுரியும் கௌசல்யாவின் கணவர் பூபாலன், மாணவியிடம் செல்போன் நம்பரை வலுக்கட்டாயமாக கேட்டதுடன், தவறான செய்கை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் பூபாலனை நேற்று கைது செய்தனர்.


