News September 15, 2024
சென்னையில் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணிக்க குழு

சென்னையில் நீர்நிலை, பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையை மீறி கட்டிட கழிவுகளை சாலையோரம், நீர்நிலைகளின் கரைகளில் கொட்டிச் செல்வதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில் இந்த நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி 3 குழுக்களை நியமித்துள்ளது.
Similar News
News November 8, 2025
சென்னையில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்து இயங்காது

சென்னையில் இருந்து நேற்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து கேரள போக்குவரத்து துறை போலீசார் சிறைபிடித்து பொதுமக்களை நடுவழியில் இறக்கிவிட்டனர். 70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்துள்ளதால் நேற்று இரவு 8 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.
News November 8, 2025
FLASH: ரிப்பன் மாளிகையில் போலீஸ் குவிப்பு!

சென்னை, தூய்மை பணியாளர்கள் இன்று 100-வது நாள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலை 10.30 மணிக்கு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிப்பன் மாளிகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கவே போலீஸ் பாதுகாப்பு என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
News November 8, 2025
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னை, SIR குறித்த சந்தேகங்களுக்கு வாக்காளர்கள் விளக்கம் பெற சென்னை மாநகராட்சி தொடர்பு எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெரம்பூர்-9445190204, கொளத்தூர்-9445190206, வில்லிவாக்கம்-9445190208, எழும்பூர்-9445190206, இராயபுரம்-7867070540, துறைமுகம்-8778381704, அண்ணா நகர் -9445190208, சேப்பாக்கம்-9445190209, சைதாப்பேட்டை-9445190213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.


