News January 22, 2026
சென்னையில் கலை போட்டிகள்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 05-08, 09-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் பிப்.7ம் தேதி காலை 9மணியளவில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 18, 2026
சென்னை: தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை!

சென்னை; அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் தூய்மை பணியாளர், அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு, போதையில் வந்த நபர், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்சர்(35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
News February 18, 2026
சென்னை: குளியளறையில் ஆடைகளின்றி பெண் சடலம்!

சென்னை: தி.மலையைச் சேர்ந்தவர் ரோஜா (35) வழக்கறிஞரான இவர், நேற்று(பிப்.16) முன்தினம் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நண்பர் யஷ்வந்த் குமாருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். பின் இருவரும் மது அருந்தியுள்ளனர். அன்றைய தினம், ஹோட்டலில் இருந்து வெளியே சென்ற யஷ்வந்த, திரும்பி வந்த போது, குளிக்கும் தொட்டியில் ஆடைகளின்றி ரோஜா இறந்து கிடந்தார். விசாரணையில், இது விபத்தாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
News February 18, 2026
முடிவுக்கு வந்த 17 ஆண்டு கால காத்திருப்பு!

வேளச்சேரி – பரங்கிமலை 5 கி.மீ தூரத்தை இணைக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தடதிட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 17ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிகட்ட சோதனை அடுத்த மாதம் நடைபெறும் எனவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.


