News December 14, 2025
சென்னையில் இன்றே கடைசி நாள்!

சென்னையில் வீட்டில் வளர்க்கும் செல்லபரணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமம் பெரும் கால்நடை மருத்துவ முகாம் இன்று நிறைவடையுள்ளது. சென்னையில் 1,00,098 செல்லப்பிராணிகள் பதிவு செய்திருந்தாலும், 56,378 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது. நாளை முதல் வீடு வீடாக சென்று உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 20, 2025
சென்னை: தூய்மைப் பணியாளர் தற்கொலை!

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர் வீட்டு வாடகை கட்ட முடியாமல், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.19) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அவருடைய உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 20, 2025
சென்னையில் மிரட்டி மாமூல் வசூல்!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தம்பிதுரை (40). இவரது தம்பி தமிழழகன் (39). இவர்கள் இருவரும் ரவுடி நாகேந்திரனின் அக்கா மகன்கள் ஆவர். பிரபல குற்றவாளிகளான இவர்கள் இருவரும், நாகேந்திரனின் பெயரை சொல்லி மாமூல் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
News December 20, 2025
சென்னையில் மிரட்டி மாமூல் வசூல்!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தம்பிதுரை (40). இவரது தம்பி தமிழழகன் (39). இவர்கள் இருவரும் ரவுடி நாகேந்திரனின் அக்கா மகன்கள் ஆவர். பிரபல குற்றவாளிகளான இவர்கள் இருவரும், நாகேந்திரனின் பெயரை சொல்லி மாமூல் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.


