News December 16, 2025
சென்னையில் இன்று முதல் வீடு வீடாக ஆய்வு!

இன்று (டிச-16) சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்க்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறவில்லை எனில் இன்று முதல் வீடு வீடாக ஆய்வு செய்து ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிபிடதக்கது.
Similar News
News December 22, 2025
சென்னை: 8th போதும், ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 1) வகை: தமிழக அரசு 2) வயது: 18-37 3) சம்பளம்: Rs.19,500 – Rs.62,000 4) கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி! 5) கடைசி தேதி: 02.01.2026, 6) மேலும் தகவலுக்கு: <
News December 22, 2025
சென்னையில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை, வண்ணாரப்பேட்டை போதி ராஜ் நகர் 2வது தெருவில் வசிக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளி சங்கர் (32) மற்றும் அவரது மனைவி வைதேகி (30) இருவருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறால் வைதேகி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். பலமுறை அழைத்தும் வராததால், மனமுடைந்த சங்கர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வண்ணாரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 22, 2025
சென்னையில் மாநகர பேருந்து விபத்து!

சென்னை MTC பேருந்து, நேற்று இரவு கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. பணிமனைக்கு பேருந்தை ஓட்டி சென்ற போது, ஓட்டுநர் பழனிக்கு மயக்கம் ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


