News August 6, 2024
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தி.நகர், கே.கே. நகர், ஏரிக்கரை சாலை, கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அசோக் நகர், சாலிகிராமம், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், அண்ணா நகர், பட்டாபிராம், சாந்தி காலனி, ஷெனாய் நகர், அம்பத்தூர், இராயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Similar News
News September 19, 2025
பனைமரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்

தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால், மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியம். இந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி விவாதிக்கும். ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். மாவட்ட குழுவின் முடிவே இறுதியானது. அனுமதி பெற்ற பின்னரே மரத்தை வெட்ட வேண்டும்.
News September 19, 2025
சென்னை: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 19, 2025
சென்னையில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து வெடிகுண்டு நிபுணர்களைக் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்திற்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வெடிகுண்டு நிபுணர்களைக் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.