News July 5, 2025
சென்னையில் இன்று கரண்ட் கட்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை போரூர், குன்றத்தூர் பிரதான சாலை, கே.கே. நகர், பெரம்பூர், பல்லாவரம், திருநீர்மலை, துரைபாக்கம், திருமுடிவாக்கம், கோயம்பேடு, சென்னையையடுத்த தாம்பரம், செம்பரம்பாக்கம், பகுதிகளில் கரண்ட் கட் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதற்கு தகுந்தார் போல் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Similar News
News July 5, 2025
சென்னை மாநகராட்சிக்கு 2027ல் புதிய கவுன்சில் மண்டபம்

சென்னை மாநகராட்சி புதிய கவுன்சில் மண்டபம் 2026ல் தயாராகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப சிக்கலால் திட்டம் ஒரு வருடம் தாமதமாகி 2027ல் மட்டுமே முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.77 கோடி மதிப்பில் நான்கு தளங்களுடன், ஒரே மண்டபத்தில் மேயர், துணை மேயர் அலுவல்கள் மற்றும் கவுன்சில் கூட்டங்கள் நடத்தும் மாநாட்டு அறைகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டது.
News July 5, 2025
ஊர்க்காவல் படையில் வேலை

சென்னை ஊர்க்காவல் படையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குற்ற பின்னனி இல்லாதவர்கள், சென்னையில் வசிப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுயவிவரத்தை வரும் 30ஆம் தேதிக்குள் addlcophqrs4@gmail.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பலாம். மேலும் தகவல்களுக்கு 95667 76222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். <<16935096>>தொடர்ச்சி<<>>
News July 5, 2025
ஊர்க்காவல் படையில் வேலை

சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், சுயதொழில் புரிபவர்கள், உயர் தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது நல தொண்டில் ஈடுபாடு கொண்ட சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை – 15 என்ற முகவரிக்கு உங்கள் சுயவிவரத்தை தபால் அனுப்பலாம்.