News August 16, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 6, 2026
சனிப்பெயர்ச்சி: சென்னையில் செல்ல வேண்டிய கோயில்!

சென்னையை அடுத்த பொழிச்சலூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம். இங்கு அகத்தியருக்கு, சிவன் சுயம்புவாக தோன்றி காட்சியளித்ததாகவும், சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எந்த வகையான தோஷமாக இருந்தாலும், இங்கு வழிபட்டால் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News March 6, 2026
எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் மூடல்!

எழும்பூர் ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் தற்காலிகமாக மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் B1, B2 மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட உள்ளது. மேலும், மார்ச் 9 முதல் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News March 6, 2026
சென்னை: போலீஸ் சீருடையுடன் வீடு புகுந்து அத்துமீறல்!

சென்னை, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சூர்யா என்னும் காவலர் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், சீருடையுடன் மதுபோதையில் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் அறையை விட்டு வெளியே வந்து, கதவைப் பூட்டிவிட்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். விரைந்து வந்த போலீசார், சூர்யாவிடம் விசாரணை செய்து பணியிடை நீக்கம் செய்தனர்.


