News July 5, 2025
சென்னையில் இனிமேல் ஈசியா புகார் அளிக்கலாம்

சென்னை மெட்ரோபொலிட்டன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) பொதுமக்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க, புதிய Grievance Redressal System அமைத்துள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சனைகளை தெரிவிக்க 044-4567 4567 (20 லைன்கள்) என்ற எண்ணிலும், இலவச தொலைபேசி எண் 1916 மூலமாகவும் புகார் அளிக்கலாம். மேலும் QR கோடு ஸ்கேன் செய்தும் புகார் பதிவு செய்யலாம்.
Similar News
News July 5, 2025
சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணி தீவிரம்

சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்புப் பணிகளைத் தமிழக அரசு ரூ.338 கோடி மதிப்பில் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஆலந்தூர் வட்டம் மற்றும் சின்னம் பகுதிகளில் ரூ.9.4 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் மற்றும் உள்வாங்கி நீரோட்டச் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் வெள்ள சேதங்களைக் கட்டுப்படுத்த உதவும்.
News July 5, 2025
திருமணம் வரம் தரும் திரிசூலம் திரிபுரசுந்தரி

சென்னை திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது திரிசூலநாதர் திருக்கோயில். இது ஒரு பழமையான சிவன் கோயிலாகும். நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளதால், இந்த மலைகள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. இங்குள்ள அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு புடவை சார்த்தி, வளையல் அணிவித்து, சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News July 5, 2025
சென்னை முழுவதும் உற்பத்தி செய்பவர்களுக்கு உதவித் தொகை

சென்னை முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 6, 135 உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ரூ.122.7 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் உற்பத்தியாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.