News September 20, 2024
சென்னையில் அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல்

சென்னை கொடுங்கையூர் சிட்கோ நகரில் உள்ள எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.கடந்த 18 ஆம் தேதி பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் நேற்று ஆய்வு செய்தனர். இன்று மாலை எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நேற்று அப்பு பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 15, 2025
கே.கே.நகரில் விழுந்த ராட்சத மரம்

சென்னை, கே.கே.நகர் 80 அடி சாலையில் பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு முன்பாக மழை நீர் வடிகால் பணியின் போது பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளது. அப்போது, பள்ளம் தோண்டும் போது மரத்தின் வேர்களை வெட்டியதால் பிடிமானம் இல்லாமல் சற்றுமுன் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
News September 15, 2025
தயார் நிலையில் மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் ரிப்பன் கட்டட வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு, தயார்நிலையில் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
News September 15, 2025
சென்னை: இலவசமாக காசிக்கு போக சூப்பர் வாய்ப்பு

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <