News August 9, 2024

சென்னைக்கு புதிய காவல் அதிகாரிகள் நியமனம் 2/2

image

24 காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி, தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக கங்கேஸ்வரி, சைபர் கிரைம் துணை ஆணைராக சரினா பேகம், ஊழல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக முத்தமிழ், சைபர் அரங்க கண்காணிப்பாளராக மீனாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 10, 2025

விருதுகளை அள்ளிய தமிழக அரசு

image

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இரண்டு முக்கிய விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரயிலுக்கான நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருது மற்றும் சிறந்த பயணிகள் சேவைக்கான பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விருதுகள் நவம்பர் 9 அன்று ஹரியானா குருகிராமில் நடைபெற்ற மாநாட்டில் வழங்கப்பட்டது.

News November 10, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News November 9, 2025

SIR – திமுக சார்பில் வார் ரூம் அமைப்பு

image

சென்னையில் SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சந்தேகங்களை தீர்க்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை விட திமுக தான் அதிக களப்பணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் 8065420020 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

error: Content is protected !!