News December 27, 2025

சென்னிமலை அருகே சோகம்

image

சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் 1010 காலனியை சேர்ந்தவர் பழனிசாமி (42). தச்சுப்பட்டறை வைத்து வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பழனிசாமி உயிரிழந்ததாக தெரிவித்தனர். சென்னிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 30, 2025

கொடிவேரி அணையில் வாலிபர் பலி

image

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது நண்பர்களுடன் சேலம் சுற்றுலா சென்று விட்டு வரும்பொழுது மது வாங்கிக்கொண்டு கொடிவேரி அணை பாலத்தில் அமர்ந்து குமரகுரு, தினேஷ், விக்னேஷ், ராஜா கார்த்தி ஆகிய 5 பேரும் மது அருந்தி உள்ளனர். அப்பொழுது 4 பேரும் காரில் தூங்கிய நிலையில் கார்த்தி பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தி மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை.

News December 30, 2025

ஈரோடு: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News December 30, 2025

பண்ணாரி: நேருக்கு நேர் மோதி விபத்து!

image

பண்ணாரி அருகே சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குய்யனூர் பிரிவு அருகே நேற்று இரவு 2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற இருவர் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை.

error: Content is protected !!